28.3.11

முக்கிய அறிவிப்பு:
நண்பர்களுக்கு வணக்கம். இப்போது சமஸ் என்கிற பெயரில்   http://writersamas.blogspot.in/  என்கிற முகவரியில் இயங்கும் வலைப்பூவில் நான் தொடர்கிறேன். ஆகையால், நண்பர்கள் இனி என்னுடைய எழுத்துகளை வாசிக்க மேற்கண்ட தளத்துக்கு வருமாறு அழைக்கிறேன். நன்றி.
தங்கள்...
சமஸ் 

Labels:

தினமணியிலிருந்து ஆனந்த விகடனுக்கு..!

(என்னுடைய வலைத்தளத்திலும் சரி, முகப்புத்தகத்திலும் சரி, எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை வெளியிடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது கிடையாது. என்னுடைய எழுத்துகளைச் சேகரித்துவைக்கும், மேலும் சிலரிடம் கொண்டுசெல்லும் இடங்களாகவே அவற்றைக் கருதிவந்திருக்கிறேன். ஆனால், இந்தப் பதிவை நான் இங்கு பகிர்ந்துகொள்வது விதிவிலக்காகிறது.)
மேலும்...

Labels:

21.1.11

பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்!


    இந்த 34-வது சென்னைப் புத்தகக் காட்சியின் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள் யார்? யாருடைய புத்தகங்கள் விற்பனையில் அதிகமாக இருக்கின்றன?
அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ராமச்சந்திர குஹா, விக்ரம் சேத்?
இல்லை.
ஜெயமோகன், இமையம், பெருமாள்முருகன்?
கிடையாது.
அட, வைரமுத்து, ரமணி சந்திரன்?
ம்.. ஹூம்.
    இப்போதெல்லாம் புத்தகக் காட்சிகளில் ஒரு புதிய படை எழுத்தாளர்கள்தான் கலக்குகிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியையும் அவர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் புதிய படை எழுத்தாளர்களைப் பதிவிறக்க எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கலாம்.
அதென்ன பதிவிறக்க எழுத்தாளர்கள்?
மேலும்...

Labels:

வெற்றிகரமான பதிப்பாளராவது எப்படி?

   
     சென்னைப் புத்தகக் காட்சி வளாகத்தில் காலையிலிருந்து இரவு வரை ஒரு வாரம் அலைந்தால் தமிழ்ப் பதிப்புத் துறையின் அவ்வளவு தொழில் சூட்சுமங்களையும் தெரிந்துகொண்டு விடலாம் போலிருக்கிறது.
   தமிழ்ப் பதிப்புத் துறையை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்குக் காணக் கிடைக்கும் பிம்பங்கள் மிகக் கௌரவமானவை. ஆனால், உள்ளே தெரியும் பிம்பங்களோ மிக மோசமானவை. அதேசமயம், பரிதாபத்தை ஏற்படுத்துபவையும்கூட.  தமிழகத்தில் அறிவுசார் தளத்தைக் கட்டமைப்பதில் முக்கிய இடத்தை வகிக்கும் பதிப்புத் துறையில் இன்றைக்கு ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? (எந்த எழுத்தாளரும் எழுதி, எந்தப் பதிப்பாளரும் பதிப்பிக்க வாய்ப்பில்லை என்பதால், பதிப்புத் துறைக்குப் புதிதாக வரும் அப்பாவிகளின் நலன் கருதி இந்த 10 ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன.)

மேலும்...

Labels:

24.12.10

விடுவிக்கப்படுவாரா பெரியார்?

 திருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டிருக்கும் பெரியார் பயன்படுத்திய வேன். (வலது) பெரியார் கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்'.

திருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.
  அந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன.  இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973-ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு. குப்பையாகக் கிடக்கிறது.
மேலும்...

Labels:

8.12.10

இந்த நாடு யாருடையது?


   இந்தியர்களுக்கு ஊழல் அந்நியமல்ல. உண்மையை ஒத்துக்கொள்வதில் நமக்குச் சங்கடம் இல்லை என்றால், அது இந்திய வாழ்வின் ஓர் அங்கம். இந்த நாட்டின் குடியரசுத் தலைவர், முதன்மைச் செயலர்களில் தொடங்கி ஊராட்சி மன்ற உறுப்பினர், உதவியாளர்கள் வரை எவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்வில் ஊழலை எதிர்கொள்கிறோம். நம் வீட்டுக்கு மிக அருகிலும் அல்லது வீட்டுக்குள்ளேயும்கூட ஊழலில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களை எதிர்ப்பதில்லை. தேவைப்படும் தருணங்களில் அவர்களுடன் கலப்பதிலும்கூட நமக்குச் சங்கடம் இருப்பதில்லை.
மேலும்...

Labels:

4.12.10

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?

     மன்னார்குடி ஓர் அற்புதமான நகரம். இந்தியாவின் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று அது. ஒரு காலத்தில் சுமார் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நகரமாக அது இருந்தபோது, அந்தச் சின்ன நகரத்தில் நாட்டின் பெரிய குளங்களில் ஒன்றான 'ஹரித்ராநதி' உள்பட சிறிதும் பெரிதுமாக 98 குளங்கள் இருந்தன. இவை யாவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. வடுவூர் ஏரியிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. நீளம், 100 அடி அகலத்தில் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் கொண்டுவரப்பட்டு இந்தக் குளங்கள் நிரப்பப்பட்டன.
   காவிரியின் கிளைநதியான பாமணி அரவணைத்திருக்க, மிகக் கச்சிதமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட தெருக்களும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட வீதிகளும் சொல்லொண்ணா அழகை அந்த நகருக்குத் தந்தன. ஆங்கிலேயர்கள் அந்த நகரின் அழகை உணர்ந்திருந்தார்கள். 1866-ம் ஆண்டிலேயே மன்னார்குடியை நிர்வகிக்க நகர சபையை உருவாக்கினார்கள் அவர்கள்.
மேலும்...

Labels:

4.11.10

ஊழல் நமக்குப் பழகிவிட்டதா?


ரூ. 1763790000000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் கணக்கிட்டிருக்கும் தொகை இது.
மேலும்...

Labels:

25.10.10

இது எந்த நாகரிகத்தின் எச்சம்?


    தமிழகத்தின் பிரதான கட்சிகள் திருச்சியில் அண்மையில் அடுத்தடுத்து நடத்திய மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களின்போதும், கூட்டம் முடிந்த இரவுப் பொழுதுகளில் அந்தக் காட்சியைக் காண முடிந்தது. வெறிச்சோடிய காலி மைதானம், அதில் லட்சம் காலிக் கோப்பைகள், பல்லாயிரக் கணக்கான பொட்டலத் தாள்கள், போத்தல்கள், பாக்குத் தாள்கள், பாலிதீன் பைகள், அறுந்த செருப்புகள், நொறுக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள்...
மேலும்...

Labels:

12.10.10

வரலாற்றின் மீதான சூதாட்டம்

 
   வரலாற்றில் நமக்குள்ள மிகப் பெரிய சௌகரியம், அதை எங்கிருந்து வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப தொடங்கிக்கொள்ளலாம். அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ கிளை அளித்துள்ள தீர்ப்பின் மூலம் வரலாற்றை, வரலாற்றுக் காலத்துக்கெல்லாம் அப்பாலும் தொடங்கிக்கொள்ளும் வசதியை இந்திய நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்கின்றன.
மேலும்...

Labels:

10.10.10

கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும்...

கொண்டலாத்தி...
தமிழ்க் கவிதையுலகில் முன்னுதாரணம் இல்லாத முயற்சி இது; பார்த்தவுடனேயே பரவசப்படுத்துகிறது. முழுக்க முழுக்க பறவைக் கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தச் சின்ன புத்தகத்தின் மூலம் தமிழ்க் கவிதையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் கவிஞர் ஆசை.
மேலும்...

6.10.10

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


அது 9.4.1948. ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் 140 கோடி) 'ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான 'சந்திரலேகா' அன்றைய தினம் வெளியானது. தனது நீண்ட கால கனவைக் களமிறக்கி ஓர் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.எஸ். வாசன். தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் 'சந்திரலேகா' வெளியானது.  இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது 'சந்திரா' என்ற பெயரில், இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. படத்தை வெளியிட ஒரே போட்டி.
மேலும்...

Labels:

3.10.10

யாருடைய எலிகள் நாம்?


     அமெரிக்கக் குழந்தைகளுக்கான மருந்துகளை மேம்படுத்தும் வகையில், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்...

Labels:

ஒரு மனிதன்... ஒரு கோயில்... ஒரு புத்தகம்...


 தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில்,  சமகாலத்தில் இந்த விழாவில் கொண்டாடப்பட வேண்டியவர் யாராக இருக்க முடியும்? கேள்வி நீளமானது. ஆனால், பதில் சுருக்கமானது. குடவாயில் பாலசுப்ரமண்யன்.
மேலும்...

Labels:

26.9.10

எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?


   ராஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் என்னுள் இந்தக் கேள்வி எழும்: எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
மேலும்...

Labels:

16.9.10

காலை உணவுத் திட்டம்!



இந்தியாவின் பிரச்னைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது? சந்தேகமே இல்லாமல் அது பயன்படுத்திக்கொள்ளாமல் வீணாகும் வளங்களில்தான் இருக்கிறது.
மேலும்...

Labels:

25.8.10

ஜாதி உண்டு!

 
 எனக்கு ஜாதி பிடிக்காது; உங்களுக்கும்கூட ஜாதி பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு ஜாதிக்கு மட்டும் 4,830 கோத்திரங்கள் உள்ள ஒரு நாட்டில் இருந்துகொண்டு, 25,000-க்கும் மேற்பட்ட ஜாதிகளும் துணை ஜாதிகளும் உள்ள ஒரு நாட்டில் இருந்துகொண்டு ஜாதி இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், நாம் ஏமாற்றுகிறோம் அல்லது ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
மேலும்...

Labels:

11.8.10

போராட்டமா; யாரங்கே?

     மது, மது வகைகள், மதுப் பழக்கம், மது விற்பனை, மதுவிலக்கு இவற்றையெல்லாம்பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. தமிழகத்தில் மதுவிலக்கை அமலாக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். மதுவிலக்கு தேவையில்லை; ஆனால், உள்நாட்டு மது வகைகளுக்கும் - குறிப்பாக கள்ளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று இன்னொரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், தமிழக அரசோ இந்த விஷயத்தில் ஒரு வினோதமான கொள்கையைப் பின்பற்றிவருகிறது.
மேலும்...

Labels:

2.8.10

உடைபடும் சீழ்க்கட்டிகள்

                தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் களிப்பில் ஆழ்த்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அத்திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தன்னுடைய களிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அவருடைய அளவில் இந்தக் களிப்பு நியாயமானது.   ஏனெனில், தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய மாநில அரசுகளும் இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதனால், பல மாநில அரசுகள் இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தை தத்தமது மாநிலங்களில் அறிமுகப்படுத்தும் யோசனையில் இருக்கின்றன.
      ஆனால், தமிழக முதல்வர் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான் நாட்டின் தலைநகரத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குரூர முகபாவங்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 4 பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 18 பெரிய நிறுவனங்கள் பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வகை செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை (கேஷ் லெஸ் மெடி க்ளைம்)  சில முக்கிய நகரங்களிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் நாட்டின் பல நகரங்களுக்கு இந்நடவடிக்கை நீளலாம்.
மேலும்...

Labels:

9.7.10

தமிழ் ஆதிமொழியாக வேண்டுமா; அழியாமொழியாக வேண்டுமா?

    
        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில், "தமிழே உலக முதல் தாய்மொழி'' என்று பிரகடனப்படுத்தியிருப்பதன் மூலம் காலங்காலமாக தமிழின் வளர்ச்சியை அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாக்கத்துக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார் முதல்வர் மு. கருணாநிதி.
மேலும்...

Labels:

என்ன செய்யப்போகிறோம்?

    
     முரண்கள் சூழ்ந்த ஒரு தருணம் இது. ஒருபுறம், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நம் மொழியின் பழைமையையும் அதன் செவ்வியல்தன்மையையும் கொண்டாடும் வகையில் மாநாடு எடுக்கிறோம்; மறுபுறம், அம்மொழியின் இன்றைய நிலை, அது எதிர்கொள்ளும் நவீன மாற்றங்கள் - சவால்கள், அதன் எதிர்காலம்குறித்த கவலை நம் யாவருடைய மனத்திலும் கவிந்திருக்கிறது. ஆனால், செம்மொழியான எம் மொழியின் எதிர்காலம் இந்த முரண்களுக்கு இடையில்தான் சிக்குண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
மேலும்...

Labels:

28.4.10

மாயாஜால சக்கரவர்த்தியுடன் ஓர் உரையாடல்

       மேடை தவிர்த்து எல்லா இடங்களையும் சூழ்ந்திருக்கிறது இருள். ஆனால், அந்த அடர்த்தியான கருமையிலும் பார்வையாளர்களின் முகத்தில் புதைந்திருக்கும் பதற்றம் எதிரொளிக்கிறது. மேடையின் நடுவே ஒரு மேஜையில் தன் மகன் கிடத்தப்பட்டிருக்க அந்தக் கிழட்டு மனிதர் பேசுகிறார்.
"எனக்குத் தெரியும். எத்தனையோ மாயாஜாலக்காரர்கள் அபாயகரமான தங்கள் வித்தையின் பாதியிலேயே மேடையில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆம். மாயாஜாலம் என்பது அதுதான். இங்கு எதுவுமே சாதாரணம் அல்ல. இதோ அந்தக் கலைக்காகதான் நான் என் மகனையே பணயம் வைக்கிறேன்.''
மேலும்...

Labels:

37, தோப்புத் தெரு

     37, தோப்புத் தெரு.
     ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37-ம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான 'வேள்வித்தீ'யின் கரு உருவான இடமும் 'தேனீ' இலக்கிய இதழ் வெளியான இடமும் இதுதான். ஆம். எம்.வி. வெங்கட்ராம் வாழ்ந்து மறைந்த முகவரி இது!
மேலும்...

Labels:

தீர்க்க முடியாததல்ல மின் பிரச்னை

        தமிழகத்தையே வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது மின்வெட்டுப் பிரச்னை. இது தாற்காலிகமானதல்ல என்னும் உண்மை மேலும் நிலைமையை மோசமானதாக்குகிறது. அரசு எந்தளவுக்கு பிரச்னையை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ரூபாய் அரிசியையும் ஐம்பது ரூபாய் மளிகைப் பொருள்களையும் காட்டி இப்பிரச்னையை எதிர்கொண்டுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் இந்த அரசை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை வேறொன்று இருக்க முடியாது. இப்போதும்கூட பிரச்னை கை மீறிப் போய்விடவில்லை.
மேலும்...

Labels:

இருண்ட காலம்

         கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரபூர்வ மின்வெட்டுடன் முன்னறிவிப்பற்ற மின்வெட்டையும் செயல்படுத்திவருகிறது மின் வாரியம். பெரும்பாலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த மின்வெட்டால், மின் பயன்பாடற்ற கடந்த நூற்றாண்டு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் மக்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் எப்போது மின்சார விநியோகம் இருக்கும் எப்போது நிறுத்தப்படும் என்பது யாருக்குமே புரியாத ஒன்றாக மாறிவிட்டது.
மேலும்...

Labels: