9.7.10

தமிழ் ஆதிமொழியாக வேண்டுமா; அழியாமொழியாக வேண்டுமா?

    
        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில், "தமிழே உலக முதல் தாய்மொழி'' என்று பிரகடனப்படுத்தியிருப்பதன் மூலம் காலங்காலமாக தமிழின் வளர்ச்சியை அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாக்கத்துக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார் முதல்வர் மு. கருணாநிதி.
மேலும்...

Labels:

என்ன செய்யப்போகிறோம்?

    
     முரண்கள் சூழ்ந்த ஒரு தருணம் இது. ஒருபுறம், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நம் மொழியின் பழைமையையும் அதன் செவ்வியல்தன்மையையும் கொண்டாடும் வகையில் மாநாடு எடுக்கிறோம்; மறுபுறம், அம்மொழியின் இன்றைய நிலை, அது எதிர்கொள்ளும் நவீன மாற்றங்கள் - சவால்கள், அதன் எதிர்காலம்குறித்த கவலை நம் யாவருடைய மனத்திலும் கவிந்திருக்கிறது. ஆனால், செம்மொழியான எம் மொழியின் எதிர்காலம் இந்த முரண்களுக்கு இடையில்தான் சிக்குண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
மேலும்...

Labels: