25.10.10

இது எந்த நாகரிகத்தின் எச்சம்?


    தமிழகத்தின் பிரதான கட்சிகள் திருச்சியில் அண்மையில் அடுத்தடுத்து நடத்திய மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களின்போதும், கூட்டம் முடிந்த இரவுப் பொழுதுகளில் அந்தக் காட்சியைக் காண முடிந்தது. வெறிச்சோடிய காலி மைதானம், அதில் லட்சம் காலிக் கோப்பைகள், பல்லாயிரக் கணக்கான பொட்டலத் தாள்கள், போத்தல்கள், பாக்குத் தாள்கள், பாலிதீன் பைகள், அறுந்த செருப்புகள், நொறுக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள்...
மேலும்...

Labels:

12.10.10

வரலாற்றின் மீதான சூதாட்டம்

 
   வரலாற்றில் நமக்குள்ள மிகப் பெரிய சௌகரியம், அதை எங்கிருந்து வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப தொடங்கிக்கொள்ளலாம். அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ கிளை அளித்துள்ள தீர்ப்பின் மூலம் வரலாற்றை, வரலாற்றுக் காலத்துக்கெல்லாம் அப்பாலும் தொடங்கிக்கொள்ளும் வசதியை இந்திய நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்கின்றன.
மேலும்...

Labels:

10.10.10

கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும்...

கொண்டலாத்தி...
தமிழ்க் கவிதையுலகில் முன்னுதாரணம் இல்லாத முயற்சி இது; பார்த்தவுடனேயே பரவசப்படுத்துகிறது. முழுக்க முழுக்க பறவைக் கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தச் சின்ன புத்தகத்தின் மூலம் தமிழ்க் கவிதையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் கவிஞர் ஆசை.
மேலும்...

6.10.10

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


அது 9.4.1948. ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் 140 கோடி) 'ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான 'சந்திரலேகா' அன்றைய தினம் வெளியானது. தனது நீண்ட கால கனவைக் களமிறக்கி ஓர் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.எஸ். வாசன். தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் 'சந்திரலேகா' வெளியானது.  இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது 'சந்திரா' என்ற பெயரில், இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. படத்தை வெளியிட ஒரே போட்டி.
மேலும்...

Labels:

3.10.10

யாருடைய எலிகள் நாம்?


     அமெரிக்கக் குழந்தைகளுக்கான மருந்துகளை மேம்படுத்தும் வகையில், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்...

Labels:

ஒரு மனிதன்... ஒரு கோயில்... ஒரு புத்தகம்...


 தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில்,  சமகாலத்தில் இந்த விழாவில் கொண்டாடப்பட வேண்டியவர் யாராக இருக்க முடியும்? கேள்வி நீளமானது. ஆனால், பதில் சுருக்கமானது. குடவாயில் பாலசுப்ரமண்யன்.
மேலும்...

Labels: